ஒடிசாவில் புதிதாக 79 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,500 ஐத் தாண்டியுள்ளது.
மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒடிசாவில் இதுவரை 1,517 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 861 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 649 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். இன்று பாதிக்கப்பட்ட 79 பேரில், அதிகபட்சமாக கட்டாக் மாவட்டத்தில் 16 பேருக்கு தொற்று உறுதி ஆகியுள்ளது.
நேற்று 103 பேருக்கு தொற்று உறுதியானதே மாநிலத்தில் ஒருநாளில் அதிகபட்ச பாதிப்பாகும்.