கர்நாடகத்தில் புதிதாக 100 பேருக்கு கரோனா தொற்று; மொத்த பாதிப்பு 2,282 ஆக உயர்வு

கர்நாடகத்தில் புதிதாக 100 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

கர்நாடகத்தில் புதிதாக 100 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கர்நாடகத்தில் இன்று கரோனா பாதிக்கப்பட்டோர் விவரத்தை அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கர்நாடகத்தில் மேலும் 100 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,282 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கரோனாவுக்கு இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், இன்று 17 பேர் உள்பட மொத்தம் 722 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது 1,514 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com