நாகாலாந்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
கரோனா தொற்று இல்லாத மாநிலமாக இருந்த நாகாலாந்தில் நேற்று முதல்முறையாக மூன்று பேருக்கு வைரஸ் தொற்று செய்யப்பட்டது. திமாபூரில் இருவருக்கும், கோஹிமாவிலிருந்து ஒருவருக்கும் தொற்று இருப்பது உறுதியானதாகவும், இவர்கள் மூவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள் என்றும் அம்மாநில அரசுத் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், நாகாலாந்தில் இன்று மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
தொடர்ந்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக முதல்வர் நீபியு ரியோ தெரிவித்தார்.
தற்போது யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் மட்டும் கரோனா பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.