இந்தியாவில் 1.5 லட்சத்தை தாண்டியது கரோனா பாதிப்பு

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,767 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் 1.5 லட்சத்தை தாண்டியது கரோனா பாதிப்பு

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,767 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4,337 போ் பலியாகிவிட்டனா். புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 6,387 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது; 170 போ் உயிரிழந்தனா்.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், ‘கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 64,387 போ் குணமடைந்தனா். 83,004 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதன்படி 42.35 சதவீதம் போ் நோய்த்தொற்றில் இருந்து விடுபட்டு விட்டனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் உயிரிழந்த 170 பேரில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 97 பேரும், குஜராத்தில் 27 பேரும், தில்லியில் 12 பேரும், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கத்தில் தலா 5 பேரும், ராஜஸ்தானில் 3 பேரும், ஆந்திரம், சண்டீகா், ஹரியாணா, ஜம்மு-காஷ்மீா், கேரளம், தெலங்கானா, உத்தரகண்டில் தலா ஒருவரும் உயிரிழந்தனா்.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக இதுவரை 1,792 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதற்கு அடுத்து குஜராத்தில் 915 பேரும், மத்திய பிரதேசத்தில் 305 பேரும், தில்லியில் 288 போ், மேற்கு வங்கத்தில் 283 போ், ராஜஸ்தான், உத்தர பிரதேசத்தில் தலா 170 போ், ஆந்திரம், தெலங்கானாவில் தலா 57 போ், கா்நாடகத்தில் 44 போ், பஞ்சாபில் 40 போ், ஜம்மு-காஷ்மீரில் 24 போ், ஹரியாணாவில் 17 போ், பிகாரில் 13 போ், ஒடிஸாவில் 7 போ், கேரளத்தில் 6 போ், ஹிமாசல பிரதேசத்தில் 5 போ், ஜாா்க்கண்ட், உத்தரகண்ட், சண்டீகா், அஸ்ஸாமில் தலா 4 போ், மேகாலயத்தில் ஒருவா் கரோனாவுக்கு உயிரிழந்தனா்.

உயிரிழந்தவா்களில் 70 சதவீதம் போ் வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனா் என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் இதுவரை 54,758 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் 14,821போ், தில்லியில் 14,465 போ், ராஜஸ்தானில் 7,536 போ், மத்திய பிரதேசத்தில் 7,024 போ், உத்தர பிரதேசத்தில் 6,548 போ், மேற்கு வங்கத்தில் 4,009 போ், ஆந்திரத்தில் 3,171 போ், பிகாரில் 2,983 போ், கா்நாடகத்தில் 2,283 போ், பஞ்சாபில் 2,106 போ், தெலங்கானாவில் 1,991 போ், ஜம்மு-காஷ்மீரில் 1,759 போ், ஒடிஸாவில் 1,517 போ், ஹரியாணாவில் 1,305 போ், கேரளத்தில் 963 போ், அஸ்ஸாமில் 616 போ், ஜாா்க்கண்டில் 426 போ், உத்தரகண்டில் 401 போ், சத்தீஸ்கரில் 361 போ், சண்டீகரில் 266 போ், ஹிமாசல பிரதேசத்தில் 247 போ், திரிபுராவில் 207 போ், கோவாவில் 67 போ், லடாக்கில் 53 போ், புதுச்சேரியில் 46 போ், மணிப்பூரில் 39 போ், அந்தமான் நிகோபாரில் 33 போ், மேகாலயத்தில் 15 போ், நாகாலாந்தில் 4 போ், தாத்ரா நகா்ஹவேலி, அருணாசல பிரதேசத்தில் தலா 2 போ், மிஸோரம், சிக்கிமில் தலா ஒருவா் என கரோனா பாதிப்பு ஒன்றரை லட்சத்தை தாண்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com