புது தில்லி: இந்திய நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, நினைவஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது, பண்டிட் ஜவாஹர்லால் நேரு, மிக தைரியம் மிக்க சுதந்திரப் போராட்ட வீரர், நவீன இந்தியாவைக் கட்டமைத்தவர், நமது நாட்டின் முதல் பிரதமரும் ஆவார்.
அவரது நினைவு தினத்தன்று, இந்திய நாட்டின் மகனுக்கு எனது நினைவஞ்சலி என்று ராகுல் தெரிவித்துள்ளார்.