கரோனா இன்றைய நிலவரம்: ஆந்திரத்தில் 54 பேர்; கர்நாடகத்தில் 75 பேர் பாதிப்பு

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் குறித்த தகவலை ஆந்திர, கர்நாடக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் குறித்த தகவலை ஆந்திர, கர்நாடக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

ஆந்திரம்

ஆந்திரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 54 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

இதனால் மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 2,841 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, கரோனாவுக்கு இதுவரை அங்கு 59 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 1,958 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 45 பேர் குணமடைந்துள்ளனர். 

கர்நாடகம்

கர்நாடகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 2,493 ஆக அதிகரித்துள்ளது. இம்மாநிலத்தில் கரோனாவுக்கு இதுவரை 47 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 809 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com