கேரளத்தில் இன்று 84 பேருக்கு கரோனா தொற்று உறுதி: பினராயி விஜயன்

கேரளத்தில் இன்று 84 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
கேரளத்தில் இன்று 84 பேருக்கு கரோனா தொற்று உறுதி: பினராயி விஜயன்


திருவனந்தபுரம்: கேரளத்தில் இன்று 84 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

மேலும், தவறுதலாக புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் தெலங்கானாவுக்கு பதிலாக கேரளம் வரும் ரயிலில் வந்த நிலையில், அவர் மரணம் அடைந்துவிட்டதாகவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

வெளிமாநிலங்களில் இருந்து வந்த 48 பயணிகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்த 31 பயணிகளுக்கும் இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது கேரளத்தில் 526 பேர் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com