தில்லியில் புதிய உச்சம் தொட்டது கரோனா பாதிப்பு

தில்லியில் ஒரேநாளில் புதிதாக 1,024 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தில்லியில் ஒரேநாளில் புதிதாக 1,024 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,024 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் 16,281 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 231 பேர் குணமடைந்ததையடுத்து, மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,495 ஆக உயர்ந்துள்ளது. இன்று 13 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம்  பலியானோர் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தேதியில் மொத்தம் 8,470 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com