கரோனா: எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்கள் 195 பேர் பாதிப்பு

கரோனாவால் பாதிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்களின் எண்ணிக்கை 195 ஆக அதிகரித்துள்ளது. 
கரோனா: எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்கள் 195 பேர் பாதிப்பு

கரோனாவால் பாதிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்களின் எண்ணிக்கை 195 ஆக அதிகரித்துள்ளது. 

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. இதில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்களும் தொற்றுக்கு ஆளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) ஊழியர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 195 ஆக அதிகரித்துள்ளது. கடந்த இரு நாள்களில் ஒரு மருத்துவ மாணவர், மூன்று மருத்துவர்கள், 8 செவிலியர்கள், உணவகத்தில் உள்ள 5 தொழிலாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும், ஆய்வக ஊழியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு காவலர்களும் அடங்குவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com