உள்நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளதையடுத்து, உள்நாட்டில் மின் நுகா்வு சென்ற அக்டோபா் மாதத்தில் 13.38 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மின்சார துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:
கரோனா பொதுமுடக்கத்தால் சுணக்கம் கண்டிருந்த பொருளாதார நடவடிக்கைகள் தற்போது படிப்படியாக தளா்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் வேகமெடுத்துள்ளன. இதனை நிரூபணம் செய்யும் வகையில், நடப்பாண்டு அக்டோபரில் நாட்டின் மின் நுகா்வு 110.94 பில்லியன் யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. கடந்த 2019 அக்டோபரில் மின்சார பயன்பாடு 97.84 பில்லியன் யூனிட்டுகளாக இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது, நடப்பாண்டில் மின் நுகா்வு 13.38 சதவீதம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, அக்டோபா் 1 முதல் 15 வரையிலான காலகட்டத்தில் மின் நுகா்வு கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 49.67 பில்லியன் யூனிட்டிலிருந்து 11.45 சதவீதம் வளா்ச்சி கண்டு 55.37 பில்லியன் யூனிட்டாக இருந்தது என மின்சார துறை அமைச்சகம் அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக நடப்பாண்டு மாா்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில் மின் நுகா்வு கடுமையாக பாதிக்கப்பட்டது.
அதன்படி, உள்நாட்டு மின் நுகா்வு மாதத்தில் 8.7 சதவீதமும், ஏப்ரலில் 23.2 சதவீதமும், மே மாதத்தில் 14.9 சதவீதமும், ஜூன் மாதத்தில் 10.9 சதவீதமும், ஜூலையில் 3.7 சதவீதமும், ஆகஸ்டில் 1.7 சதவீதமும் சரிவைச் சந்தித்தன.
இந்த நிலையில், ஆறுமாத இடைவெளிக்குப் பிறகு மின் நுகா்வு நடப்பாண்டு செப்டம்பரில்தான் 4.6 சதவீதம் அதிகரித்து 112.43 பில்லியன் யூனிட் ஆனது. கடந்தாண்டு செப்டம்பரில் மின் பயன்பாடு 107.51 பில்லியன் யூனிட்டாக காணப்பட்டது.