முகக்கவசம் அணிவது கட்டாயம்: சட்டம் இயற்றும் ராஜஸ்தான் அரசு

கரோனா பரவலைத் தடுக்க முதல்முறையாக முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி  ராஜஸ்தான் மாநில அரசு சட்டம் இயற்றுகிறது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

கரோனா பரவலைத் தடுக்க முதல்முறையாக முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி  ராஜஸ்தான் மாநில அரசு சட்டம் இயற்றுகிறது. 

கரோனா பரவுவதைத் தடுக்க முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் மசோதா ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படவுள்ளது. முன்னதாக, ராஜஸ்தான் தொற்றுநோய்கள் திருத்தச் சட்ட மசோதாவை சட்டப்பேரவை விவகாரங்கள் துறை மந்திரி சாந்தி தாரிவால் பேரவையில் அறிமுகம் செய்தார். இந்த சட்டம் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குகிறது. 

முதல்வர் அசோக் கெலாட் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், கரோனாவிலிருந்து பாதுகாக்க முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க ஒரு சட்டத்தை இயற்றும் முதல் மாநிலமாக ராஜஸ்தான் உள்ளது. இன்று சட்டப்பேரவையில் இந்த சட்டம் பெருவாரியான ஆதரவுடன் நிறைவேற்றப்படவுள்ளது. ஏனெனில் கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையில், முகக்கவசமே கரோனாவுக்கு தடுப்பூசியாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com