கரோனா பரவலைத் தடுக்க முதல்முறையாக முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி ராஜஸ்தான் மாநில அரசு சட்டம் இயற்றுகிறது.
கரோனா பரவுவதைத் தடுக்க முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் மசோதா ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படவுள்ளது. முன்னதாக, ராஜஸ்தான் தொற்றுநோய்கள் திருத்தச் சட்ட மசோதாவை சட்டப்பேரவை விவகாரங்கள் துறை மந்திரி சாந்தி தாரிவால் பேரவையில் அறிமுகம் செய்தார். இந்த சட்டம் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குகிறது.
முதல்வர் அசோக் கெலாட் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், கரோனாவிலிருந்து பாதுகாக்க முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க ஒரு சட்டத்தை இயற்றும் முதல் மாநிலமாக ராஜஸ்தான் உள்ளது. இன்று சட்டப்பேரவையில் இந்த சட்டம் பெருவாரியான ஆதரவுடன் நிறைவேற்றப்படவுள்ளது. ஏனெனில் கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையில், முகக்கவசமே கரோனாவுக்கு தடுப்பூசியாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.