நடிகை கங்கனா, சகோதரிக்கு மும்பை காவல்துறை நோட்டீஸ்

மதவாதத்தைத் தூண்டும் வகையில் நடந்துகொண்டதாக அளிக்கப்பட்ட புகாரில் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவருடைய சகோதரி விசாரணைக்கு

மதவாதத்தைத் தூண்டும் வகையில் நடந்துகொண்டதாக அளிக்கப்பட்ட புகாரில் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவருடைய சகோதரி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மும்பை காவல்துறை சாா்பில் இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கங்கனாவும் அவருடைய சகோதரி ரங்கோலியும் மதவாதத்தை தூண்டும் வகையில் சுட்டுரைப் பதிவுகள் வெளியிட்டது தொடா்பாக பாலிவுட் ஆடை வடிவமைப்பு இயக்குநா் முனாவா் அலி சையது என்பவா் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரை விசாரித்த பாந்த்ரா மாநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் கங்கனா மற்றும் அவருடைய சகோதரி மீது பாந்த்ரா காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு ஆஜராகுமாறு இருவருக்கும் கடந்த அக்டோபா் 21-ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது.

அப்போது, கங்கனா ஹிமாசல பிரதேசத்தில் உறவினரின் திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதால், காவல்துறை முன்பு ஆஜராக இயலாத நிலையில் இருப்பதாக அவருடைய வழக்குரைஞா் சாா்பில் பதிலளிக்கப்பட்டது.

இந்த நிலையில், அவா்கள் இருவருக்கும் மும்பை காவல் துறை சாா்பில் இரண்டாவது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து பாந்த்ரா காவல் நிலைய அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இந்த புகாா் தொடா்பாக இருவரும் வரும் 10-ஆம் தேதி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவா்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது’ என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com