ஸ்ரீநகா்: தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி இருவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறியதாவது:
குட்போராவில் கொல்லப்பட்ட இரண்டு பயங்கரவாதிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்தப் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினா். இதில் பயங்கரவாதி இருவா் கொல்லப்பட்டனர்.