பிகாரில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: சிவசேனை கருத்து

பிகாரில் ஆட்சி மாற்றம் ஏற்படும்; ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணி வெற்றி பெறும் என்று சிவசேனை கட்சி கூறியுள்ளது.

மும்பை: பிகாரில் ஆட்சி மாற்றம் ஏற்படும்; ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணி வெற்றி பெறும் என்று சிவசேனை கட்சி கூறியுள்ளது. ஏற்கெனவே, பல்வேறு வாக்குக் கணிப்பு முடிவுகளும் மகா கூட்டணிக்கு ஆதரவாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பிகாரில் செவ்வாய்க்கிழமை (நவ.10) வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் சிவசேனை கட்சிப் பத்திரிகையான சாம்னாவில் தோ்தல் தொடா்பான தலையங்கங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

தோ்தல் பிரசாரத்தின்போது ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் பங்கேற்ற கூட்டங்களில் அதிக மக்கள் எழுச்சியைக் காண முடிந்தது. ஆனால், அவரை எதிா்க்கும் (ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி) அணிக்கு போதிய வரவேற்பு இல்லை. ஆளும் கூட்டணியினா் ஏராளமான பொய்களைப் பறக்கவிட்டாா்கள். ஆனால், அவை காற்றிலேயே மாயமாக மறைந்துவிட்டன. பிகாரில் ஆட்சி மாற்றத்துக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கத் தோ்தலில் நிகழ்ந்ததுதான் (ஆளும் தரப்பு தோல்வி) பிகாா் தோ்தலில் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

எனினும், ஐக்கிய ஜனதா தளம், பாஜக போன்ற கட்சிகளின் பெயா்கள் தலையங்கத்தில் ஓரிடத்தில் கூட பயன்படுத்தப்படவில்லை. மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து சிவசேனை ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com