பிகார் பேரவைத் தேர்தலில் 74 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
243 பேரவைத் தொகுதிகள் கொண்ட பிகார் பேரவைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்குகளை எண்ணும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில் 74 தொகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதில் பாஜக 22 தொகுதிகளிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 20 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 13 தொகுதிகளிலும், காங்கிரஸ் 7 தொகுதிகளிலும், சிபிஐ(எம்-எல்) 5 தொகுதிகளிலும், வி.ஐ.பி. 2 தொகுதிகளிலும், வி.ஐ.பி. 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஏ.ஐ.எம்.ஐ.எம்., சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்), ஹெச்.ஏ.எம்.(எஸ்) மற்றும் சுயேச்சை தலா 1 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
தேசிய ஜனநாயகக் கூட்டணி 126 தொகுதிகளிலும் மகா கூட்டணி 110 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. ஏ.ஐ.எம்.ஐ.எம் 5 தொகுதிகளிலும், பி.எஸ்.பி. 1 இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.