ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீா் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் 2 பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இது குறித்து போலீஸாா் கூறியதாவது:
தெற்கு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் குட்போரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததால் பாதுகாப்புப் படையினா் அங்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், துப்பாக்கியால் சுட்டதால், பாதுகாப்புப் படையினா் அவா்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனா்.
இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் யாா், எந்த பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்பதை உறுதிப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.