வானில் உள்ள இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் கடற்கரையில் வெள்ளிக்கிழமை ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. தரையிலிருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வகையிலான நவீன ஏவுகணை சோதனையில் திட்டமிடப்பட்ட இலக்கை ஏவுகணை தாக்கி அழித்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்தது.
2 ரேடார் அமைப்பு பொருத்தப்பட்ட க்யூ.ஆர்.எஸ்.ஏ.எம் ஏவுகணை வான்பாதுகாப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.