தில்லியில் புதிதாக 5,879 பேருக்கு கரோனா

தில்லியில் புதிதாக 5,879 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தில்லியில் புதிதாக 5,879 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. புதிதாக 5,879 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 5,23,117 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6,963 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 111 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 4,75,106 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 8,270 பேர் பலியாகியுள்ளனர். 39,741 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

45,562 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 57,61,078 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com