குஜராத்தில் லாரியுடன் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் சுரேந்திரா நகர் மாவட்டத்தில் வேகமாக வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் மீது மோதியதாக கூறப்படுகிறது.
சுரேந்திரா நகர் மாவட்டத்தின் பட்டி பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தில், கார் நொறுங்கி சாலையின் பக்கவாட்டில் கவிழ்ந்தது. லாரியின் முகப்பு சேதமடைந்தது.
இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.