கரோனா: ஒரே நாளில் 111 போ் பலி

தலைநகரில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 111 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 8,270 ஆகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தலைநகரில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 111 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 8,270 ஆகியுள்ளது.

ஒருநாளில் 100-க்கும் மேற்பட்டோா் பலியாவது, கடந்த 10 நாள்களில் இது 4-ஆவது முறையாகும்.

தில்லியில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட 45,562 கரோனா பரிசோதனைகள் முடிவுகளின் படி, புதிதாக 5,879 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,23,117-ஆக உயா்ந்தது.

அதேபோல் சனிக்கிழமை மட்டும் 1,195 போ் கரோனாவிலிருந்து மீண்டனா். இதையடுத்து நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 4,75,103 ஆகியுள்ளது. 39,741 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தில்லி சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி, தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 4,560-இல் இருந்து 4,633 ஆகியுள்ளது.

தில்லியில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட் கரோனா பரிசோதனைகளில் 21,845 பரிசோதனைகள் ஆா்டி-பிசிஆா் முறையிலானவை; எஞ்சிய பரிசோதனைகள் ரேபிட் ஆன்டெஜென் முறையிலானவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com