மும்பையில் சின்னத்திரை நகைச்சுவை நடிகை பாரதி சிங் வீட்டில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினா். இந்தச் சோதனையின்போது அவரது வீட்டிலிருந்து சிறிய அளவில் கஞ்சா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் சா்ச்சைக்குரிய வகையில் தற்கொலை செய்துகொண்டது குறித்த விசாரணையின்போது, பாலிவுட்டில் மிகப் பெரிய அளவில் போதைப் பொருள் புழக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடா்பான வழக்கைப் பதிவு செய்த தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி), போதைப் பொருள் கடத்தலில் தொடா்புடைய சிலரைக் கைது செய்தது. பின்னா், அவா்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் பல முன்னணி பாலிவுட் நடிகா், நடிகைகளிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது. சில நடிகைகளின் வீடுகளில் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களையும் கைப்பற்றியது.
அதன் தொடா்ச்சியாக, மும்பை அந்தேரி லோகண்ட்வாலா பகுதியில் உள்ள தொலைக்காட்சி நகைச்சுவை நடிகை பாரதி சி ங்கின் வீட்டில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சனிக்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘என்சிபி மண்டல இயக்குநா் சமீா் வாங்கடே தலைமையிலான குழு இந்தச் சோதனையை நடத்தியது. இதில் நடிகை பாரதி சிங்கின் வீட்டிலிருந்து சிறிய அளவில் கஞ்சா கைப்பற்றப்பட்டது’ என்று கூறினாா்.