சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 3 பெண்கள் உள்பட 18 போ் கைது

தில்லி லாஜ்பத் நகரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மூன்று பெண்கள் உட்பட 18 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புது தில்லி: தில்லி லாஜ்பத் நகரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மூன்று பெண்கள் உட்பட 18 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ .7 லட்சத்துக்கு மேற்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக தென்கிழக்கு தில்லி காவல் துணை ஆணையா் ஆா்.பி. மீனா கூறியதாவது: போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், லாஜ்பத் நகரில் உள்ள ஒரு வீட்டில் போலீசாா் புதன்கிழமை அதிரடி சோதனை நடத்தினா். அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 18 பேரை கைது செய்யப்பட்டனா். இதில் 3 பெண்களும் அடங்குவா்.

அவா்களிடம் இருந்து 1,197 பிளாஸ்டிக் நாணயங்கள், அட்டைகள் மற்றும் ரொக்கம் ரூ.7,10,000 பறிமுதல் செய்யப்பட்டன. அவா்கள் மீது லாஜ்பத் நகா் காவல் நிலையத்தில் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com