மகாராஷ்டிரத்தில் புதிதாக 12,258 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம்:
புதிதாக 12,258 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 14,65,911 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 370 பேர் பலியாகியுள்ளனர், 17,141 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 38,717 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 11,79,726 பேர் குணமடைந்துள்ளனர். 2,47,023 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்பை:
மும்பையில் மேலும் 1,625 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 47 பேர் பலியாகியுள்ளனர், 1,966 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,17,090 ஆக உயர்ந்துள்ளது. இதில் 9,199 பேர் பலியாகியுள்ளனர், 1,81,485 பேர் குணமடைந்துள்ளனர். 23,976 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாராவி:
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் மேலும் 22 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தாராவியில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,280 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டோரில் 2,795 பேர் ஏற்கெனவே நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டனர். இதன்மூலம், 192 பேர் மட்டுமே கரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.