புது தில்லி: மூலதனச் சந்தையிலிருந்து நிறுவனங்கள் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1.1 லட்சம் கோடியை திரட்டியுள்ளன.
இதுகுறித்து செபியின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
விரிவாக்க திட்டங்கள், கடன்களை திருப்பி செலுத்துதல், செயல்பாட்டு மூலதனத் தேவைகளுக்காக நிறுவனங்கள் நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. அந்த வகையில், சென்ற ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனங்கள் மூலதனச் சந்தையில் கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகளை வெளியிட்டு ரூ.1.1 லட்சம் கோடியை திரட்டியுள்ளன.
இது ,முந்தைய ஜூலை மாதத்தில் நிறுவனங்கள் திரட்டிய ரூ.66,915 கோடியுடன் ஒப்பிடும்போது 64 சதவீதம் அதிகமாகும் என செபி தெரிவித்துள்ளது.