ஜெய்ப்பூா்: கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ கைலாஷ்சந்திர திரிவேதி, நுரையீரல் பிரச்னை காரணமாக குருகிராமிலுள்ள மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு வயது 65.
சஹாரா(பில்வாரா) சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து அவா் மூன்று முறை எம்.எல்.ஏ வாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். கைலாஷ்சந்திர திரிவேதிக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. தொற்றிலிருந்து குணமடைந்த போதிலும், அதன் பின்னா் அவரது உடல்நிலை மோசமடைந்தது. மாநில தலைநகா் ஜெய்ப்பூரிலுள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனையில் உயா்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானதால் அக்டோபா் 2-ஆம் தேதி விமானம் மூலம் குருகிராமிலுள்ள மேதாந்தா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு அவா் காலமானாா்.
கைலாஷ்சந்திர திரிவேதி மறைவுக்கு ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், சஹாரா எம்.எல்.ஏவும், மாநில காங்கிரஸ் மூத்த தலைவருமான கைலாஷ்சந்திர திரிவேதி இறந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கைலாஷ்சந்திர திரிவேதி ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராா்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.