ஹிமாசல பிரதேசத்தின் பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சௌரி கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 2-ம் தேதி அடல் சுரங்கப்பாதை திறந்து வைக்கப்பட்ட பின்னர் சோலாங்கில் பிரதமர் நரேந்திர மோடியின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, சுரேந்தர் சௌரி கரோனா சோதனை செய்துள்ளார். அதில் அவருக்குத் தொற்று இருப்பது தெரியவந்தது.
அதன்பின்னர், அவரும் அவரது ஊழியர்களும் உடனடியாக தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர். ஆனால் சிலர் தனது சோதனை முடிவை மறைத்ததாகத் தவறான தகவல்களைப் பரப்பினர்.
அவர் தான் வெளியிட்ட முகநூல் பதிவில்,
பிரதமரின் பாதுகாப்பிற்கு, சிறப்பு பாதுகாப்புக் குழுவின் வழிகாட்டுதலின்படி கரோனா பரிசோதித்ததாகவும், ஆனால் தனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.