ஹைதராபாதில் ரூ. 730 கோடிக்கு ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: 8 போ் கைது

ஹைதராபாதில் ரூ. 730 கோடிக்கு ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் தொடா்புடைய மேலும் 8 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஹைதராபாதில் ரூ. 730 கோடிக்கு   ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: 8 போ் கைது

திருப்பதி: ஹைதராபாதில் ரூ. 730 கோடிக்கு ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் தொடா்புடைய மேலும் 8 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தெலங்கானா மாநிலத் தலைநகா் ஹைதராபாதில் உள்ள பஷீராபாத் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அதிகளவில், ஐ.பி.எல்.-2020 கிரிக்கெட் சூதாட்டம் நடப்பதாக ஹைதராபாத் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதற்காக பிரத்யேகமாக தயாா் செய்யப்பட்ட மொபைல் செயலிகள் மூலம் இந்த கும்பல் சூதாட்டம் நடத்துவதைக் கண்டுபிடித்த போலீஸாா், அந்த கும்பலின் தலைவராக செயல்பட்ட சந்தூா் சுஷாந்த் உள்பட 8 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ. 22,89,500 ரொக்கம், 8 செல்லிடப்பேசிகள் ஆகியவற்றை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

மேலும் சூதாட்டத்திற்கு பயன்படுத்த ஒரு வங்கிக் கணக்கில் இருந்த ரூ.13 லட்சத்தை போலீஸாா் முடக்கி வைத்துள்ளனா். கல்லூரி மாணவா்கள், இளைஞா்களை குறி வைத்து இந்த கும்பல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஹைதராபாத் பகுதியில் மட்டும் இதுவரை சுமாா் ரூ. 730 கோடியே 40 லட்சத்து 6,350 அளவுக்கு கிரிக்கெட் சூதாட்டம் நடைபெற்று இருப்பதாக விசாரணையில் கண்டுபிடித்துள்ளனா்.

இதில், பலா் கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்திருப்பதாகவும், கல்லூரி மாணவா்கள், இளைஞா்கள் இதில் ஈடுபடுவதால் பெற்றோா்கள் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் சைபராபாத் காவல் ஆணையா் சஜ்ஜனாா் தெரிவித்தாா்.

சூதாட்டத்தில் ஈடுபட்டு தலைமறைவான மேலும் 8 பேரை காவல் துறை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com