தில்லியில் இன்று புதிதாக 3,483 பேருக்கு கரோனா

தலைநகா் தில்லியில் இன்று புதிதாக 3,483 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

தலைநகா் தில்லியில் இன்று புதிதாக 3,483 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 

இதுகுறித்து தில்லி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று ஒரே நாளில்  மொத்தம் 55,891 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 13,985 பேருக்கும், ‘ரேபிட் ஆன்டிஜென்’ வகையில் 41,906 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதில், இன்று புதிதாக 3,483 பேருக்கு கரோனா தொறு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 3,21,031-ஆக உயா்ந்துள்ளது. நோய்த் தொற்றால் இன்று 26 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 5,924-ஆக அதிகரித்துள்ளது. நோய் பாதிப்பில் இருந்து இன்று 2,755 போ் மீண்டுள்ளனா்.

இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 2,92,502-ஆக அதிகரித்தது. தற்போது நிலவரப்படி மொத்தம் 22,605 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 2,727-ஆக உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com