மகாராஷ்டிரத்தில் மேலும் 11,447 பேருக்குக் கரோனா

மகாராஷ்டிரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் 11,447 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மகாராஷ்டிரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் 11,447 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரத்தில் கரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. இதன்படி, மாநிலத்தில் இன்று 11,447 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,76,062ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 89 ஆயிரத்து 715 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 13,885 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதையடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,44,368 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் 306 பேர் பலியாகினர். இதனால் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 41,502 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com