'இந்தியாவைவிட பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் சிறப்பாக செயல்படுகின்றன'

கரோனா விவகாரத்தில் இந்தியாவை விட பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் கூட சிறப்பாக செயல்படுவதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி  தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ்  எம்.பி. ராகுல்காந்தி (கோப்புப்படம்)
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி (கோப்புப்படம்)

கரோனா விவகாரத்தில் இந்தியாவை விட பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் கூட சிறப்பாக செயல்படுவதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி  தெரிவித்துள்ளார்.

கரோனா காலத்தில் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் கடுமையான சரிவை சந்தித்த நிலையில் அண்டை நாடுகளுடனான இந்தியாவின் ஜி.டி.பி. வீழ்ச்சி குறித்து ராகுல்காந்தி சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

அதில், பிரதமர் நரேந்திர மோடி  தலைமையிலான அரசை விமர்சிக்கும் விதமாக  பாஜக அரசின் மற்றொரு வலுவான சாதனை என்று இந்தியாவின் ஜி.டி.பி. வீழ்ச்சி பெருமளவு சரிந்த படத்தைப் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவை விட பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பாக செயல்படுவதாகவும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com