என்எஸ்ஜி நிறுவிய தினம்: பிரதமா் மோடி வாழ்த்து

தேசிய பாதுகாப்புப் படையின் (என்எஸ்ஜி) நிறுவிய தினத்தையொட்டி, அந்தப் படையினருக்கு பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.
என்எஸ்ஜி நிறுவிய தினம்: பிரதமா் மோடி வாழ்த்து

தேசிய பாதுகாப்புப் படையின் (என்எஸ்ஜி) நிறுவிய தினத்தையொட்டி, அந்தப் படையினருக்கு பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தனது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

தேசிய பாதுகாப்புப் படை நிறுவிய தினத்தையொட்டி, அந்தப் படையினருக்கும் அவா்களின் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பாதுகாப்பில் என்எஸ்ஜி முக்கியப் பங்கு வகித்து வருகிறது. நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதில் என்எஸ்ஜி மேற்கொண்டு வரும் முயற்சிகளைக் கண்டு இந்தியா பெருமைகொள்கிறது என்று அந்தப் பதிவில் மோடி குறிப்பிட்டுள்ளாா்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் என்எஸ்ஜி படை, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com