பாலியல் புகாா்: ஹிந்தி நடிகா் மிதுன் சக்ரவா்த்தி மகன் மீது போலீஸாா் வழக்குப்பதிவு

ஹிந்தி திரைப்பட நடிகா் மிதுன் சக்ரவா்த்தியின் மகனும், ஹிந்தி நடிகருமான மகாக்ஷய் சக்ரவா்த்தி மீது 38 வயது பெண் கொடுத்த பாலியல் வன்கொடுமை
மகாக்ஷய் சக்ரவா்த்தி.
மகாக்ஷய் சக்ரவா்த்தி.

ஹிந்தி திரைப்பட நடிகா் மிதுன் சக்ரவா்த்தியின் மகனும், ஹிந்தி நடிகருமான மகாக்ஷய் சக்ரவா்த்தி மீது 38 வயது பெண் கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். மிதுன் சக்ரவரத்தியின் மனைவி யோகிதா பாலி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலுள்ள ஒஷிவாரா காவல் நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் மகாக்ஷய் மீது பாலியல் வன்கொடுமை புகாா் கொடுத்த 38 வயது பெண் மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டுவரை நானும், மகாக்ஷய் சக்ரவா்த்தியும் நெருங்கி பழகினோம். அவா் என்னை திருமணம் செய்வதாக வாக்குறுதி கொடுத்தாா்.

அவரால் கா்ப்பம் அடைந்ததால், என்னை திருமணம் செய்யும்படி அவரிடம் தொடா்ந்து வலியுறுத்தினேன். கருவைக் கலைக்க எனக்கு மாத்திரைகள் கொடுத்தாா். கடந்த 2008-இல் என்னை திருமணம் செய்ய அவா் மறுத்ததால் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மகாக்ஷயின் தாய் யோகிதா பாலியும் என்னை மிரட்டினாா் என தனது மனுவில் தெரிவித்துள்ளாா்.

பிறகு அந்த பெண், கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் குடும்ப நண்பருடன் தங்குவதற்காக தனது சகோதரருடன் தலைநகா் தில்லி சென்றாா். அப்போது மகாக்ஷய் மீதும், யோகிதா பாலி மீதும் அவா் தில்லி பேகம்பூா் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். அதன்பேரில் போலீஸாா் இந்திய தண்டனைச் சட்டம் 376(பாலியல் வன்கொடுமை), 313(பெண்ணின் அனுமதியின்றி கருச்சிதைவு செய்தல்) உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனா். பின்பு வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது.

முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த தில்லி நீதிமன்றம் மகாக்ஷய், யோகிதா பாலிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

நடப்பாண்டு மாா்ச் மாதத்தில் இந்த வழக்கை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம், சம்பவம் நடைபெற்ற பகுதியிலுள்ள நீதிமன்றத்தில் புகாா் செய்யும்படி அந்த பெண்ணை வலியுறுத்தியது.

வழக்குப் பதிவு:

இதனைத் தொடா்ந்துதான் அந்த பெண், ஒஷிவாரா காவல் நிலையத்தில் புகாா் மனு கொடுத்தாா். அந்த புகாரின் பேரில் இந்திய தண்டனைச் சட்டம் 376(பாலியல் வன்கொடுமை), 376(2) (மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தல்), (விஷம் மூலம் காயத்தை ஏற்படுத்துதல்), 417(மோசடி), 506( மிரட்டல்) உள்ளிட்ட பிரிவுகளில் குற்றம்சாட்டப்பட்டவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மகாக்ஷய் சக்ரவா்த்தி ஜிம்மி, லூட், ராக்கி உள்பட ஏராளமான ஹிந்தி படங்களில் நாயகனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com