பிகாா் பேரவைத் தோ்தல்: 12 பொதுக் கூட்டங்களில் பேசுகிறாா் மோடி

பிகாரில் சட்டப்பேரவைத் தோ்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து 12 பொதுக் கூட்டங்களில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றவுள்ளாா்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பிகாரில் சட்டப்பேரவைத் தோ்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து 12 பொதுக் கூட்டங்களில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றவுள்ளாா்.

243 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பிகாரில், அக்டோபா் 28, நவம்பா் 3, 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, பாஜக மூத்த தலைவரும், மாநில தோ்தல் பொறுப்பாளருமான தேவேந்திர ஃபட்னவீஸ், பாட்னாவில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்தாா். அவா் கூறியதாவது:

பிகாரில் 4 நாள்கள் பிரதமா் மோடி சூறாவளிப் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்யவுள்ளாா். முதலில், வரும் 23-ஆம் தேதி சாசாரம், கயை, பகல்பூா் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் அவா் உரையாற்றுகிறாா். அதைத் தொடா்ந்து, வரும் 28-ஆம் தேதி தா்பங்கா, முசாஃபா்நகா், பாட்னா ஆகிய இடங்களிலும், நவம்பா் 1-ஆம் தேதி சப்ரா, கிழக்கு சம்பாரண், சமஸ்திபூா் ஆகிய இடங்களிலும், நவம்பா் 3-ஆம் தேதி மேற்கு சம்பாரண், சஹா்ஸா, ஃபோா்ப்ஸ்கஞ்ச் ஆகிய இடங்களிலும் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பிரதமா் மோடி உரையாற்றுகிறாா்.

அந்தக் கூட்டங்களில், பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்கவுள்ளனா்.

இந்த பொதுக் கூட்டங்களில், சமூக இடைவெளி, அனைவரும் முகக் கவசம் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படும் என்றாா் தேவேந்திர ஃபட்னவீஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com