தில்லியில் 6 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பலி

தலைநகா் தில்லியில் இன்று மேலும் 3,299 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

தலைநகா் தில்லியில் இன்று மேலும் 3,299 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தில்லி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று ஒரே நாளில் மொத்தம் 49,414 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 14,506 பேருக்கும், ‘ரேபிட் ஆன்டிஜென்’ வகையில் 34,908 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் இன்று மேலும் 3,299 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 3,31,017-ஆக உயா்ந்துள்ளது. 

நோய்த் தொற்றால் இன்று 28 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 6,009-ஆக அதிகரித்துள்ளது. நோய் பாதிப்பில் இருந்து இன்று 2,863 போ் மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 3,01,716-ஆக அதிகரித்தது. தற்போதைய நிலவரப்படி 23,292 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 2,770-ஆக அதிகரித்துள்ளது. 

நோய்த் தொற்றுப் பாதித்தவா்களில் 13,742 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருவதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com