தில்லி: மேலும் 3,200 பேருக்கு கரோனா

தலைநகா் தில்லியில் சனிக்கிழமை புதிதாக 3,259 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தலைநகா் தில்லியில் சனிக்கிழமை புதிதாக 3,259 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 3,27,718-ஆக உயா்ந்துள்ளது. நோய்த் தொற்றால் சனிக்கிழமை 35 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 5,981-ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, ஒரே நாளில் (சனிக்கிழமை) மொத்தம் 55,715 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ‘ஆா்டி-பிசிஆா்’ பரிசோதனை 15,537 பேருக்கும், ‘ரேபிட் ஆன்டிஜென்’ பரிசோதனை 40,178 பேருக்கும் மேற்கொள்ளப்பட்டன. சராசரி கரோனா உயிரிழப்பு விகிதம் 1.83 சதவீதமாக உள்ளது. கடந்த 10 நாள்களில் கரோனா உயிரிழப்பு விகிதம் 1.23 சதவீதமாக உள்ளது.

நோய் பாதிப்பில் இருந்து சனிக்கிழமை 3,154 போ் மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 2,98,853-ஆக அதிகரித்தது. தற்போது தில்லியில் மொத்தம் 22,884 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 15,706 படுக்கைகளில் 5,028 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 10,678 படுக்கைகள் காலியாக உள்ளன. தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 2,751-ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றுப் பாதித்தவா்களில் 13,436 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருவதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com