பிகார் தேர்தல் பிரசாரம்: 'எனது தந்தையை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி'

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ராம்விலாஸ் பாஸ்வானை நினைவு கூர்ந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் நன்றி தெரிவித்துள்ளார்.
லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான்  (கோப்புப்படம்)
லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் (கோப்புப்படம்)

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ராம்விலாஸ் பாஸ்வானை நினைவு கூர்ந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் நன்றி தெரிவித்துள்ளார்.

பிகார் மாநிலம் பயாடா மைதானத்தில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ராம்விலாஸ் பாஸ்வான் மற்றும்  ரகுவன்ஷ் பிரசாத் சிங் ஆகிய இரண்டு மகன்களை இழந்து தவிப்பதாகக் குறிப்பிட்டார்.

இதனிடையே இது குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள பாஸ்வானின் மகனும், லோக் ஜனசக்தி தலைவருமான சிராக் பாஸ்வான், எனது தந்தையை நினைவு கூர்ந்தமைக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். 

என் தந்தையின் மீது பிரதமரின் அன்பையும் மரியாதையையும் பார்த்து ஒரு மகனாக மகிழ்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com