தசரா பண்டிகை: குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

தசரா பண்டிகையையொட்டி வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், இந்தப் பண்டிகை கரோனா தொற்றின்
தசரா பண்டிகை: குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

தசரா பண்டிகையையொட்டி வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், இந்தப் பண்டிகை கரோனா தொற்றின் அனைத்து தீய விளைவுகளில் இருந்து நாட்டு மக்களைக் காத்து, அவா்களின் வாழ்வில் செழிப்பை உண்டாக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:

நாடு முழுவதும் தசரா பண்டிகை வெவ்வேறு வடிவங்களில் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை நாட்டின் கலாசார ஒற்றுமையை வலுப்படுத்துகிறது. தீமையைப் புறக்கணித்தும், நற்பண்புகளை பின்பற்றியும் நல்லிணக்கத்துடன் வாழ ஊக்கமளிக்கிறது. இந்த சுப தினத்தையொட்டி, அனைத்து இந்தியா்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com