இந்தியாவில் இன்று மேலும் 49,881 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 49,881 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 80,40,203.-ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில், கரோனா தொற்றுக்கு 517 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,20,527-ஆக அதிகரித்தது.
மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 56,480 பேர் கரோனாவிலிருந்து மீண்டனர். கரோனா தொற்றில் இருந்து இதுவரை 73,15,989 போ் குணமடைந்தனா். தொடா்ந்து 7-ஆவது நாளாக, கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 7 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. அதாவது, நாடு முழுவதும் 6,03,687 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘அக்டோபா் 28-ஆம் தேதி வரை 10,65,63,440 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 10,75,760 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன’ என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.