மாமல்லபுரத்தில் தேவர் படத்திற்கு சர்வ கட்சியினர் அஞ்சலி

மாமல்லபுரத்தில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் படத்திற்கு சர்வ கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். 
மாமல்லபுரத்தில் தேவர் படத்திற்கு சர்வ கட்சியினர் அஞ்சலி
மாமல்லபுரத்தில் தேவர் படத்திற்கு சர்வ கட்சியினர் அஞ்சலி

மாமல்லபுரத்தில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் படத்திற்கு சர்வ கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். 

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில்  தேவர் பேரவை சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113-வது ஜெயந்தி விழா சுரதீப் மருத்துவமனை நிர்வாக இயக்குனரும், மாமல்லபுரம் தேவர் பேரவை தலைவருமான ஜி.ரங்கசாமி தலைமையில் நடந்தது.

விழாவை முன்னிட்டு கங்கை கொண்டான் மண்டபம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திரு உருவப் படத்திற்கு சர்வ கட்சியினர், வியாபாரிகள், சிற்பிகள், சுற்றுலா வழிகாட்டிகள், பொதுமக்கள் எனப் பல தரப்பினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

விழாவை முன்னிட்டு அன்னதானமும், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இவ்விழாவில் திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய அதி.மு.க. செயலாளர் மாமல்லபுரம் ஜி.ராகவன், மாமல்லபுரம் நகர அ.தி.மு.க. செயலாளர் ஏ.கணேசன், மாமல்லபுரம் பா.ம.க. நகரச் செயலாளர் ரா.ராஜசேகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் லயன் ஏ.வீராசாமி, மாமல்லபுரம் முன்னாள் தேவர் பேரவைத் தலைவர் மீனாட்சி தேவர், சைனா மணி, மாமல்லபுரம் நகர இந்து முன்னணி நிர்வாகிகள் பாபு, தேவா, வேலாயுதம், சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com