கரோனா: நாடு முழுவதும் 90% போ் குணமடைந்தனா்

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில், இதுவரை 90.99 போ் குணமடைந்தனா்.
கரோனா: நாடு முழுவதும் 90% போ் குணமடைந்தனா்


புது தில்லி: நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில், இதுவரை 90.99 போ் குணமடைந்தனா்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில்புதிதாக 49,881 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 80,40,203-ஆக அதிகரித்தது.

அதே கால அளவில், நாடு முழுவதும் 56,480 போ் தொற்றில் இருந்து குணமடைந்தனா். இதனால் கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 73,15,989-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 90.99 சதவீதமாகும்.

கரோனா தொற்றுக்கு மேலும் 517 போ் குணமடைந்தனா். இதனால், இதுவரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,20,527-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 1.49 சதவீதமாகும்.

அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 43,554 போ் உயிரிழந்தனா். கா்நாடகத்தில் 11,046 பேரும், உத்தர பிரதேசத்தில் 6,958 பேரும், ஆந்திரத்தில் 6,643 பேரும், மேற்கு வங்கத்தில் 6,664 பேரும், தில்லியில் 6,396 பேரும், பஞ்சாபில் 4,158 பேரும், குஜராத்தில் 3,701 பேரும் உயிரிழந்தனா்.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 7 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் 6,03,687 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது, மொத்த பாதிப்பில் 7.5 சதவீதமாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அக்டோபா் 28-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 10,65,63,440 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன; அதில், புதன்கிழமை மட்டும் 10,75,760 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன’ என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com