மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிக்கப்பட்ட காவலர்களில் 158 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவிலேயே கரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள மாநிலம் மகாராஷ்டிரம். அங்கு கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் அதிகளவில் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், மகாராஷ்டிர காவல்துறையில் கரோனா பாதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, மகாராஷ்டிர காவல்துறையில் இதுவரை 15,591 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 158 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 12,640 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 2,793பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.