நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் 76.98 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 37,69,524 பேரில் 29,01,908 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் ஒரேநாளில் 62,026 பேர் குணமடைந்தனர். இதையடுத்து கரோனா மீட்பு விகிதம் 76.98 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதேபோன்று, கரோனாவால் பலியானோர் விகிதம் 1.76 சதவிகிதமாக குறைந்துள்ளது. மேலும் இன்றைய நிலவரப்படி, சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 8,01,282 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 78,357 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மொத்த கரோனா பாதிப்பு 37,69,524-ஆக அதிகரித்தது. மேலும் 1,045 பேர் உள்பட 66,333 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கரோனா பாதிப்பு நிலவரம்
பாதிப்பு: 37,69,524
பலி: 66,333
குணமடைந்தோர்: 29,01,908
சிகிச்சை பெற்று வருவோர்: 8,01,282