ஒடிசாவில் சிறுத்தை வேட்டை: ஒருவர் கைது
ஒடிசாவில் சிறுத்தை வேட்டை: ஒருவர் கைது

ஒடிசாவில் சிறுத்தை வேட்டை: ஒருவர் கைது

ஒடிசா வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடியதாக ஒருவரை கைது செய்து, சிறுத்தை தோலை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஒடிசா வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடியதாக ஒருவரை கைது செய்து, சிறுத்தை தோலை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

வனத்துறை அதிகாரிகள் வர்த்தகர்களை போன்று தொடர்புகொண்டு ரோந்து சென்றபோது சிறுத்தையை வேட்டையாடிய நபர் சிக்கினார்.

ஒடிசா மாநிலம் மாயூர்பஞ்ச் பகுதியில் உள்ள சிமிலிபால் தேசிய பூங்காவில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக ராய்ரங்பூர் மண்டலத்திற்குட்பட்ட கடசங்கா கிராம வனப்பகுதி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து வர்த்தகர்களை போன்று சம்பந்தப்பட்ட நபரை தொடர்புகொண்டு வனப்பகுதியில் ரோந்து சென்ற அதிகாரிகள் வனவிலங்குகளை வேட்டையாடிவந்த லஷ்மண் நாயக் என்பவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து 153 சென்டிமீட்டர் நீளமுள்ள சிறுத்தை தோலையும் அதிகாரிகள் கைப்பற்றினர். பின்னர் அவர் மீது வனப்பாதுகாப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com