இந்தியா
ஒடிசாவில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: இன்று 3,543 பேருக்குத் தொற்று
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,543 பேருக்கு புதிதாக கரோனா பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1,20,221 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,543 பேருக்கு புதிதாக கரோனா பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1,20,221 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை ஒடிசாவில் 90,331 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது 29,299 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். தொற்று காரணமாக 538 உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 86,432 பேர் புதிதாக கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் பாதிப்பு 40 லட்சத்தை தாண்டியுள்ளது என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,089 மேலும் இறந்துள்ளனர். இந்தியாவில் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 69,561ஐ எட்டியுள்ளது.