புது தில்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 75,809 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 1,133 பேர் உயிரிழந்தனர்.
நாட்டில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 75,809 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 42,80,422-ஆக அதிகரித்தது.
செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,133 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் நாட்டில் இதுவரை கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 72,775 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது 8,83,697 போ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். நாட்டில் கடந்த திங்கள்கிழமை ஒரே நாளில் 10,98,621 பேருக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை ஒட்டுமொத்தமாக 5,06,50,128 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.