மகாராஷ்டிரத்தில் புதிதாக 20,131 பேருக்கு கரோனா: 380 பேர் பலி
மகாராஷ்டிரத்தில் புதிதாக 20,131 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம்:
மகாராஷ்டிரத்தில் புதிதாக 20,131 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9,43,772 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 13,234 பேர் குணமடைந்துள்ளனர், 380 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, பலியானோரின் மொத்த எண்ணிக்கை 27,407 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 6,72,556 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 2,43,446 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாராவி:
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 6 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 100-ஐத் தாண்டியுள்ளது. தாராவியில் மட்டும் இதுவரை மொத்தம் 2,830 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், 2,459 ஏற்கெனவே குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இன்றைய தேதியில் அங்கு 101 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஒரு மாதத்துக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை மீண்டும் 100-ஐத் தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.