இமாசலில் இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 7 நாள்களுக்கான மலையேற்றப்பயணம் தொடங்கியது.
இமாசலின் சஹ்ரான் பகுதியில் தொடங்கிய இந்த மலையேற்றப் பயணத்தில் மலைவாழ் மக்களுக்கு கரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
இமாசலப்பிரதேசத்தில் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படைவீரர்களுக்கான மலையேற்றப் பயணம் சஹ்ரான் பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை துவங்கியது.
இதில் 4 பெண்கள் உள்பட 13 பாதுப்புப்படை வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். மலையேற்றப் பயணத்தின்போது மலைவாழ் மக்களுக்கு கரோனா பரவல் குறித்தும், தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த மலையேற்றப் பயணம் தொடர்ந்து ஏழு நாள்களுக்கு நடைபெறவுள்ளது.