ஒருநாள் கரோனா பாதிப்பில் 60% பேர் 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்: மத்திய சுகாதாரத்துறை

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பில் 60 சதவிகிதம்  பாதிப்பு மகாராஷ்ரம், ஆந்திரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பில் 60 சதவிகிதம்  பாதிப்பு மகாராஷ்ரம், ஆந்திரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 95,735 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே கால அளவில் 1,172 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, மொத்த பாதிப்பு 44,65,864 ஆகவும், பலி 75,062 ஆகவும் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பில் 60 சதவிகிதம் பாதிப்பு மகாராஷ்ரம், ஆந்திரம், கர்நாடகம், உத்தரப்பிரதேசம், தமீழகம் ஆகிய 5 மாநிலங்களில் ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. 

இதில், மகாராஷ்டிரத்தில் 23,000க்கும் அதிகமாகவும் ஆந்திரத்தில் 10,000-க்கும் அதிகமாகவும் ஒருநாள் பாதிப்பு உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com