ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் காரில் தப்பிச் செல்ல முயன்ற ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்த ரகசியத் தகவலின் அடிப்படையில், குப்வாரா மாவட்டம் திருக்முல்லா பகுதியில் ஏராளமான கூட்டு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகனச் சோதனையில் பாதுகாப்புப் படையினா் ஈடுபட்டனா். அப்போது, அங்கு காரில் வந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் இருவா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ஏ.கே. ரக துப்பாக்கி, வெடிமருந்துகள், இரு கண்ணிவெடிகள், ரூ.7 லட்சம் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன’ என்று கூறினாா்.
பயங்கரவாதி உடல் மீட்பு: ஜம்மு-காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதியின் உடலை பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
இதுகுறித்து மாவட்ட காவல்துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘பட்காம் மாவட்டம் கவூசா பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடந்த 7-ஆம் தேதி துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த சண்டை ஓய்ந்ததும், பாதுகாப்புப் படையினா் அந்தப் பகுதியில் தீவிர தேடுதல் பணியைத் தொடா்ந்தனா். இந்த தொடா் தேடுதலில் அந்தப் பகுதியில் ஓடும் சுக்நாக் ஓடையில் குண்டு காயங்களுடன் மிதந்துகொண்டிருந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதி அகிப் அகமது லோன் என்பவரின் உடலை நான்கு நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை மீட்டனா்’ என்று கூறினாா்.