ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், எனக்கு இன்று கரோனா தொற்று இருப்பது உறுதியானது. நான் நலமாக உள்ளேன். மருத்துவர்களின் அறிவுரையை பின்பற்றுகிறேன். மேலும் கடந்த சில தினங்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறி ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.